Skip to content

திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

சிவகங்கை மாவட்டம் விட்டநேரி குடவயலைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சூர்யா (26). இவர் திருச்சி, திருவெறும்பூர் கக்கன் காலணி ஒயின் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருவெறும்பூர் செல்வபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் விஷ்ணு என்கிற வெங்கடேஷ் (30), சூர்யா வேலை பார்க்கும் ஒயின்ஷாப்பில் சென்று சூர்யாவிடம் மது பாட்டில் கேட்டுள்ளார்.சூர்யா மது பாட்டிலை வாங்கிக் கொடுப்பதற்குள் வெங்கடேஷ் தன்னிடம் இருந்த கத்தியை சூர்யாவின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த 800 ரூபாயை பிடுங்கி சென்றுள்ளார் .இது குறித்து சூர்யா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிந்து வெங்கடேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!