Skip to content
Home » தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

  • by Senthil

.தஞ்சை கல்விராயன்பேட்டை அருகே உள்ள புது ஆறு பகுதியில்  60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை கைபற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!