Skip to content

மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில்  தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக   மேற்கு தொடர்ச்சிமலையை யொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 – 20 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி திருச்சியில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக அவ்வப்போது லேசான மழை தூறல் காணப்பட்டது.

கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் 21செமீ-க்கும் அதிகமாக அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செமீ வரையிலான மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!