Skip to content

கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் தற்போது வறட்சி நிலவி வருகிறது இதனால் பல்வேறு குடிநீர் திட்டங்கள் முடங்கியுள்ளன பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் ஆழியார் அணையிலிருந்து சித்தூர் தாலுகாவுக்கு குடிநீர் வழங்க கேரளா மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தமிழக நீர்வளத்துறையிடம்கோரிக்கை விடுத்திருந்தார் இந்நிலையில் இன்று ஆழியார் அணைக்கு வந்த கேரளா மின்வாரிய அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் சித்தூர் தாலுகாவில் உள்ள குன்னங்காட்டுப்பதி உள்ளிட்ட ஏழு கிராமங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவுக்கு ஆழியார் அணையிலிருந்து 400 கன அடி குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் ஆலோசனைமேற்கொண்ட பின்னர் கேரளாவுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் தர உறுதி அளித்தனர். உடனடியாக அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கேரளா அமைச்சர்கிருஷ்ணன் குட்டி நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!