Skip to content

தமிழ்நாடு நாள் விழா…. தஞ்சையில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி பனகல் கட்டிடம் அருகில் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்களால் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடும் விதமாக பள்ளி மாணவ-மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்  இன்று (18.07.2023)

கொடியசைத்து துவக்கி வைத்தார். எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன்   (திருவையாறு),  .டி.கே.ஜி.நீலமேகம்  (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர்  சண்.இராமநாதன் , மாவட்ட ஊராட்சித்தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.மதன்குமார் அவர்கள், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜ.சபீர்பானு மற்றும் பலர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!