Skip to content

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி: அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன?

டெல்​லி சென்​ற அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி, மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​. இதையடுத்​து, அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, 2026-ல்​ தமிழகத்​தில்​ தேசி​ய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்​சி அமை​யும்​ என்​று பதி​விட்​டுள்​ளார்​.

அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி நேற்​று டில்​லி சென்​றார்​. கடந்​த மாதம் சென்​னை​யில்​ இருந்​து காணொலி வாயி​லாக டில்​லி​யில்​ திறந்​து​வைத்​த அதி​முக அலு​வல​கத்​தை அவர்​ பார்​வை​யிட்​டார்​. அப்​போது, மாநிலங்​களவை உறுப்​பினர்​கள்​ சி.​வி.சண்​முகம்​, மு.தம்​பிதுரை ஆகியோர்​ உடனிருந்​தனர்​.

தேர்​தல்​ முடிவுக்​கு பின்​னர், `தேர்​தலில்​ பாஜக​வுடன்​ கூட்​ட​ணி வைத்​திருந்​தால்​, கணிச​மான இடங்​களைப்​ பெற்​று இருக்​கலாம்​’ என்​று அவர்​கள்​ தெரி​வித்​

தனர்​. தமிழகத்​தில்​ சட்​டப்​பேர​வைத்​ தேர்​தல்​ அடுத்​த ஆண்​டு நடை​பெற உள்​ள​தால்​, வலு​வான கூட்​ட​ணி​யை அமைக்​க பழனி​சாமி திட்​ட​மிட்​டுள்​ளார்​.

பாஜக​வின்​ தேசி​ய மற்​றும்​ மாநிலத்​ தலை​மை​யும்​ அதி​முக​வுடன்​ கூட்​ட​ணி வைக்​க தீவிர முயற்​சிகளை மேற்​கொண்​டு வரு​கிறது. அதே​நேரம்​, அதி​முக​வின்​ 2-ம்​ கட்​டத்​ தலை​வர்​கள்​, பாஜக உள்​ளிட்​ட கட்​சிகளை இணைத்​து கூட்​ட​ணி அமைக்​கலாம்​ என்​று பழனி​சாமி​யிடம்​ தெரி​வித்​து வந்தனர்​. அதனால்​ மீண்​டும்​ அதி​முக – பாஜக கூட்​ட​ணி உறு​தி​யாகி​விடும்​ என்​று கூறப்​படு​கிறது.

இதற்​கிடை​யில்​, நேற்​று சட்​டப்​பேர​வைக்​ கூட்​டத்​தொடர்​ முடிந்​ததும்​, அதி​முக முன்​னாள்​ அமைச்​சர்​கள்​ எஸ்​.பி.வேலுமணி, கே.பி.​முனு​சாமி ஆகியோர்​ சென்​னை​யில்​ இருந்​து வி​மானம்​ மூலம்​ டில்​லி சென்​றனர்​.

நேற்​று இரவு மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை அவரது இல்​லத்​தில்​ அதி​முக பொதுச் செய​லா​ளர்​ பழனி​சாமி, தம்பிதுரை,  கே.பி. முனுசாமி,  வேலுமணி,  சி.வி. சண்முகம்  உள்ளிட்டோர் சந்​தித்​துப்​ பேசி​னர்.

அப்​போது, தமிழகத்​தின்​ அரசி​யல்​ நில​வரம்​, கூட்டணி தொடர்​பாக அவர்கள்​ பேசி​யதாக தெரி​கிறது.   அத்துடன் அண்ணாமலை இனி தங்களை விமர்சித்து பேசுவதை நிறுத்தச்சொல்லுங்கள் என்றும் கோரிக்கை வைத்தார்களாம்.

எந்த நிலையிலும் சசிகலா, ஓபிஎஸ்சை அதிமுகவில் சேர்க்கமாட்டோம் என எடப்பாடி உறுதியாக  கூறினாராம். இது குறித்து  தேர்தல் நேரத்தில்  பேசிக்கொள்ளலாம் என்று அமித்ஷா கூறியதாகவும் தெரிகிறது.

இந்​த சந்​திப்​பைத்​ தொடர்ந்​து அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்​று குறிப்​பிட்டுள்​ளார்​.

‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்​று குறிப்​பிட்டுள்​ளார்​. அவரது கூற்றுப்படி  அதிமுக , பாஜக கூட்டணி அரசு தான் அமைக்க வேண்டும் என்று பேசியதாக  தெரியவருகிறது.  கூட்டணி அரசுக்கு எடப்பாடி  ஒத்துகொண்டாரா என்பதை அவர்   தெரிவிப்பார் என்று  பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

முன்​ன​தாக, தமிழ்​ மாநில காங்​கிரஸ்​ கட்​சித்​ தலை​வர்​ ஜி.கே.​வாசன்​ நேற்​று ​காலை மத்​திய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை ​நா​டாளு​மன்​ற அலு​வல​கத்​தில்​  சந்தித்து பேசினார். அப்போது  தனது எம். பி. பதவி முடிவடைய உள்ளதால், அதிமுகவின் சார்பில் ஒரு எம்.பி. பதவியை தனக்கு பெற்றுத்தரும்படியும் கோரிக்கை வைத்ததாக  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

 

error: Content is protected !!