Skip to content

சட்டமன்றத்தில் இடம் மாற்றம்… ஒபிஎஸ் அதிர்ச்சி…

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ் எதிர்கட்சித்துணைத்தலைவர் பதவியை இழந்தார். ஒபிஎஸ்சுக்கு பதிலாக அதிமுகவின் உதயகுமார் எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்ட்டார். உதயகுமாருக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகி்ல் உள்ள ஒபிஎஸ் அமர்ந்து இருந்த இடத்தை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு வருடகாலமாக கிடப்பில் இருந்த அதிமுக கோரிக்கையை இன்று சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று வெளியிட்ட உத்தரவில் உதயகுமாருக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகில் உள்ள இடம் ஒதக்கப்படுவதாகவும் ஒபிஎஸ்சுக்கு இரண்டாவது வரிசையில் முன்னாள் பேரவை தலைவர் தனபாலுக்கு அருகில் உள்ள இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!