Skip to content
Home » சைக்கோ த்ரில்லர் படத்தில் விக்ரம் பிரபு… பூஜையுடன் துவங்கியது…

சைக்கோ த்ரில்லர் படத்தில் விக்ரம் பிரபு… பூஜையுடன் துவங்கியது…

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர் விக்ரம் பிரபு. கடைசியாக அவர் நடித்த ‘டாணாக்காரன்’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு ரெய்டு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

vikram prabhu

இதையடுத்து தற்போது புதிய படம் ஒன்றில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார். சற்குணம், சுசீந்திரன் ஆகிய முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ரமேஷ் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

vikram prabhu

இந்த படத்தில் கதாநாயகியாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். சைக்கோ த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஈஷா ரெப்பா ஆகிய இருவரும் போலீசாக நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. சென்னை காளிகாம்பாள் கோயிலில் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!