Skip to content

நீச்சல் குளத்தில் 10வயதிற்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது…

  • by Authour

சென்னையில் நீச்சல் பயிற்சியின்போது 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மை லேடீஸ் பூங்கா நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்படும் , நிர்வாக ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Image

மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீச்சல் குளங்களை பராமரிப்பது மற்றும் சிறுவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் துணை இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டாது. 3.5 அடி ஆழத்திற்கு மேல் உள்ள நீச்சல் குளங்களில், 4 அடி உயரத்துக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இல்லை. நீச்சல் குளங்களில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்கள் செய்ய அனுமதி இல்லை. குறிப்பிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், விதிமுறைகளை முறையாக கண்காணிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!