Skip to content
Home » பாஜக சதியில் சிக்கிய சுவாதி மாலிவால்….. டில்லி மந்திரி அதிஷி பகீர் தகவல்

பாஜக சதியில் சிக்கிய சுவாதி மாலிவால்….. டில்லி மந்திரி அதிஷி பகீர் தகவல்

டில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி  கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான சுவாதி மாலிவால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதாககூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சுவாதி மாலிவாலின் புகார் ஆதாரமற்றது என டில்லி அரசின் கல்வி மந்திரிஅதிஷி கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று மாலை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே பா.ஜனதா கலக்கத்தில் உள்ளது. அதனால் உருவாக்கிய சதித்திட்டமே இது. பா.ஜனதா சதியின் ஒரு பகுதியே சுவாதி மாலிவாலின் புகார். கடந்த 13-ந்தேதி அவர் முதல்-மந்திரியை சந்திக்க வந்திருக்கிறார். ஆனால் அவரை பார்க்க முடியாது என தனி செயலாளர்கூறி இருக்கிறார். அதையும் மீறி அதிகாரியை மீறி  உள்ளே நுழைய சுவாதி மாலிவால் முயன்றிருக்கிறார். இதுதான்நடந்திருக்கிறது. நல்லவேளை அப்போது அங்கே கெஜ்ரிவால் இல்லை. இருந்திருந்தால் புகாருக்கு அவர் ஆளாகி இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!