Skip to content
Home » சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி

சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி

திருச்சி அடுத்த சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 700க்கும் அதிகமான காளைகள் போட்டிக்கு வந்துள்ளன. 400வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மதியம் வரை 350 காளைகள்  களம் கண்ட  நிலையில்  காளைகள் முட்டி தள்ளியதில் வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 33 பேர் காயமடைந்தனர். இவர்களில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் அரவிந்த்(25) என்ற வாலிபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர் பார்வையாளர். புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரை சேர்ந்தவர்.  காளைகள் மைதானத்தில் இருந்து வெளியே ஓடிவரும் பகுதியில்  இவர் நின்றிருந்தபோது வேகமாக வந்த காளை இவரது மார்பிலேயே முட்டி தள்ளியது. இதில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த அரவிந்த்துக்கு டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். உடனடியாக   அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். ஏற்கனவே பாலமேட்டில்   அரவிந்த்ராஜன் என்ற வீரர் இறந்த நிலையில், சூரியரில் பார்வையாளர் அரவிந்த் இறந்துள்ளார். இதனால் இன்று ஜல்லிக்கட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!