கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.இன்று கோடை விழா நிறைவிழா நடந்தது. இதில் மின்சாரத்துறை ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா,பத்தாம் , பன்னிரண்டாம் வகுப்புகளில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் உதவித்தொகை வழங்கினார்.
இதை அடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: வால்பாறையில் இனி வருடம் தோறும் கோடை விழா நடத்தப்படும்,தமிழக முதல்வரின் பல நல்ல திட்டங்கள் தமிழக மக்களுக்கு நிறைவேற்றப்படும், வருமானவரித்துறை சோதனை என் வீட்டில் நடக்கவில்லை. அந்த சோதனைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.