Skip to content
Home » வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….

வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை.  வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.  வட மாநிலத்தவர்களின் இடங்களுக்கே சென்று நம்பிக்கை ஊட்டுகிறோம். வதந்தி தொடர்பாக வட மாநில டி.ஜி.பி.க்களுடனும் பேசியுள்ளேன். பீகார் குழு ஆய்வு செய்யும்போது மேலும் நம்பிக்கை அதிகரிக்கும். வட மாநிலத்தவர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் 2752 பேர் வடமாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். வடமாநிலத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது முற்றிலும் வதந்தி. வதந்தியை பரப்பாதீங்க. 24 மணி நேரமும் திருச்சி மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் இந்த வாட்ஸ் அப் நம்பருக்கு 9498181325 புகார் அளிக்கலாம் என எஸ்பி சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!