Skip to content
Home » திருச்சியில் மழை…. பொதுமக்கள் அவதி…

திருச்சியில் மழை…. பொதுமக்கள் அவதி…

  • by Senthil

திருச்சி மாநகரில் காலையிலிருந்து குளிர்ந்த காற்றுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  திருச்சி மாநகரப் பகுதியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மலைக்கோட்டை, மரக்கடை,  ஜங்ஷன், தில்லைநகர், உறையூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று மதியம் திடீரென கனமழை பெய்து வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் திடீர் கனமழையால்  பெரும் அவதிக்கு ஆளாகினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!