Skip to content

மயிலாடுதுறை….. பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடிக்கும் மாணவன்….

  • by Authour

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சீருடை அணிந்த அரசு பள்ளி மாணவன் பொதுமக்கள் மத்தியில் பயணிகள் அமரும் இடத்தில் பொதுவெளியில் புகைபிடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

பள்ளி மாணவர்கள் கஞ்சா, கூல் லீப், ஹான்ஸ், புகை பிடித்தல் போன்ற போதைப் பொருள்கள் பயன்பாட்டிற்கு அடிமை ஆவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி சீருடை அணிந்த பள்ளி மாணவன் ஒருவன் பேருந்து நிலையத்தில் பொதுவெளியில் பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உட்கார்ந்து  புகைப்பிடித்துள்ளார்.

அருகில் மூதாட்டி ஒருவர் அமர்ந்திருக்கும் நிலையில் கண்டு கொள்ளாமல் மாணவன் புகைபிடிப்பதை ஒருவர் செல்போனில் வீடியோவாக

எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மாணவர்கள் மூன்று பேர் பெட்டி கடையில் சிகரெட் வாங்கும் போட்டோ மற்றும் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்து மாணவன் ஒருவன் புகை பிடிக்கும் வீடியோ காட்சிகள் பதிவிடப்பட்டு தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!