Skip to content
Home » மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு வந்தார்.

அப்போது நாகராஜன், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதையாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அதன் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து நாகரானுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!