திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் இன்று காலை பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது. இதனை துவக்கி வைத்து தமிழ்நாடு கவர்னர் ரவி பேசினார். அவர் பேசியதாவது:
இந்திய அடையாளம் ஸ்ரீ ராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி உள்ள மக்களை ஸ்ரீ ராமர் ஆன்மீகத்தில் இணைத்துள்ளார். சனாதனம் இந்த பாரதத்தை உருவாக்கியது.
நம் நாடு முழுவதும் ஸ்ரீ ராமரை விரும்புகிறார்கள். இந்தியாவை உலக நாடுகள் வியந்து பார்க்கிறது . இந்தியா உலகத்தின் தலைமையாக இருக்கிறது இங்கு அறிவியல் ஆன்மிகம் அனைத்தும் சிறந்து விளங்குகிறது
இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் நாடாகவும் உலகின் தலைமையாகவும் விளங்கும்
உலகில் தீவிரவாதம் உள்ளிட்ட வை அதிகம் இருக்கும் நிலையில் அவற்றிலிருந்து மக்களை காக்க உலகத்திற்கு நம் நாடு ஒளியாக இருக்கிறது
நாம் பொருளாதாரம் ,ராணுவம் ஆன்மீகம் ஆகியவற்றில் வலிமையாக இருக்கிறோம் , இவ்வாறு ரவி பேசினார்.