Skip to content

மகன் கண் முன்னே விபத்தில் எஸ்எஸ்ஐ பரிதாப சாவு ..

ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜன்(53). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு கண்மணி(21) என்ற மகளும், முகேஷ்(17) என்ற மகனும் உள்ளனர். எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்த நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் காயம் ஏற்பட்டது.  மருத்துவ விடுப்பில் இருந்த நடராஜன் கடந்த மார்ச் 24ம் தேதி ராஜபாளையம் தெற்கு போலீசில் பணியில் சேர்ந்தார். அவரால் பைக் ஓட்ட முடியாது என்பதால், முகேஷ் தினமும் பைக்கில் வேலைக்கு அழைத்து சென்று வந்தார். இன்று காலை வழக்கம் போல் முகேஷ் நடராஜனை வேலைக்கு அழைத்து சென்றார். அப்போது சத்திரப்பட்டி – ராஜபாளையம் சாலையில் சொக்கலிங்காபுரம் அருகே வந்த போது, ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட நடராஜனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!