Skip to content

பெண் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்…. ஆசிரியைகள் மீது வழக்

 தெலங்கானா மாநிலம்  அடிலாபாத்தை சேர்ந்த  அங்கன்வாடி ஆசிரியைகள் நேற்றுஅங்குள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  சம்பள உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடிகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தினர்.
 அங்கன்வாடி ஆசிரியைகள் ஒருகட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்குள்  அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த  பெண் போலீஸ்  அதிகாரி தடுக்க முயன்றார் ,  இதனால் ஆத்திரமடைந்த  ஆசிரியைகள்  போலீஸ் அதிகாரியை சூழ்ந்து கொண்டு சீருடையை பிடித்து இழுத்து  தாக்கினர். இது தொடர்பாக  15 ஆசிரியைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!