Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோயிலில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம்….

ஸ்ரீரங்கம் கோயிலில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம்….

  • by Senthil

திருச்சியில் இன்று இரவு 1மணி நேரம் விடாமல் இடி மின்னலுடன் கன மழை பெய்தது அதன் காரணமாக திருச்சி மாநகரின் பல்வேறு சாலைகள், குடியிருப்பு பகுதிகள் கோவில்களில் மழை நீர் அதிகமாக தேங்கி இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர்

சுவாமி திருக்கோவிலில் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் பக்தர்கள் வரிசையில் செல்வார்கள்.

நேற்று மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை 1 மணி நேரம் இடைவிடாத பெய்த தொடர் கனமழையின் காரணமாக பக்தர்கள் வரிசையில் செல்லும் பகுதிகளில் அதிகப்படியாக மழைநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் அந்த மழை நீரில் நனைந்தபடியே நடந்து சென்று பெருமாளை தரிசனம் செய்ய சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!