Skip to content
Home » ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதிப்பார். தைதேர் உற்சவத்தின் 5ம் திருநாளான இன்று நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில்

எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் வாகனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9ம்திருநாளான வருகிற 03ம்தேதி காலை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!