Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

  • by Senthil

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைகோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் , கோயில் மேலாளர் தமிழ்செல்வி கண்காணிப்பாளர்கள் வேல்முருகன்,கோபாலகிருஷ்ணன், மீனாட்சி, சரண்யா,

வெங்கடேசன்,துணை மேலாளர் சண்முகவடிவு,ஆய்வாளர் மங்கையர் செல்வி மங்கையர் செல்வி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்களால் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டனர்.

பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில், 81 லட்சத்து 71ஆயிரத்து 112 ரூபாய் ரொக்கமும், 179 கிராம் தங்கமும், 1524 கிராம் வெள்ளியும் மற்றும் 361 வெளிநாட்டு கரன்சி தாள்கள் காணிக்கைகளாக வரப் பெற்றுள்ளது என கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!