Skip to content
Home » சிகிச்சையில் இருந்த ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி சாந்தன் இறந்தார்…

சிகிச்சையில் இருந்த ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி சாந்தன் இறந்தார்…

ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இன்று காலை இறந்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப்பெற்று  பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கடந்த 24ம்தேதி இலங்கை செல்வதற்கான அனுமதியை சாந்தனுக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. உடல் நலம் காரணமாக அவர் இலங்கைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாந்தன் இன்று காலை இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!