Skip to content

கரூர் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியான தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஆண்டு விழாவை முன்னிட்டு ஆலய வாசலில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் சக்கரத்தாழ்வார், உற்சவர் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர்,

பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள்,சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் பட்டாச்சாரியார் சக்கரத்தாழ்வாருக்கு பட்டாடை உடுத்தி, மகா தீபாராதனை காட்டினார். கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!