திருச்சி சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் திருச்சி, திருவாரூர்,பெரம்பலூர் அருகில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் 700 க்கும் மேற்பட்ட காளைகளும் கலந்து கொள்ளும்.
ஜல்லிக்கட்டை காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இந்த வகையில் பெருமைபன பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்காக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு
மைதானம் கட்டப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி இன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூரியூா் அருகே அடிக்கல் நாட்டி ஜல்லிக்ட்டு மைதான பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த மைதானத்தில் அலுவலகம், முக்கிய விருந்தினர் தங்குவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு வீரர்கள் உடை மாற்றுவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரண்டு பகுதிகளிலும் பார்வையாளர் பார்ப்பதற்கான பிரம்மாண்ட பார்வையாளர் காலரி அமைய உள்ளது.
மற்றும் உடற்பயிற்சி அரங்கம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைய உள்ளது.இந்த பணிகள் அனைத்தும் 9 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ராட்சத ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இரு பக்கமும் ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வரவேற்றனர்.
இந்த வரவேற்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சிஎன்.சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன்,கதிரவன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், அப்துல்சமது மற்றும் துறை அதிகாரிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்…
மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ,நாளை இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளோம் .
மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என தெரிவித்தார்