Skip to content
Home » பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர் நேற்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் லலிதா, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ஆட்சியரின் தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அவ்வகையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹரிஷின் பெற்றோரிடம் நிவாரண உதவியாக மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் லலிதா இன்று வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!