திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் சுப்பாய் பண்ணையைச் சேர்ந்தவர் 48 வயதான முருகேசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலையில் அவரது தோட்டத்தில் கத்திரிக்காய் பறித்துக் கொண்டிருக்கும் போது அங்கு இருந்த விஷப்பாம்பு முருகேசனை கடித்துள்ளது.பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பிச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.