Skip to content

கர்நாடக முதல்வர் சித்தராமையா ஊட்டியில் 5 நாள் ஓய்வு

கா்நாடகத்தில் முதல்கட்ட தோ்தல் ஏப்ரல் 26-ம் தேதியும், இரண்டாம் கட்ட தோ்தல் மே 7-ம் தேதியும்  தலா 14 தொகுதிகள் வீதம் தேர்தல் முடிவடைந்தது. தோ்தலையொட்டி வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த கா்நாடக முதல்வா் சித்தராமையா, 5 நாள் ஓய்வெடுக்க நீலகிரி மாவட்டம், உதகைக்கு குடும்பத்துடன் நேற்று வந்தாா்.

இதையொட்டி, பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்ட கா்நாடக முதல்வா் சித்தராமையா தனது குடும்பத்தினருடன் உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தடைந்தாா்.

அவருடன் கா்நாடகா மின்சாரத் துறை அமைச்சா் ஜாா்ஜ், சமூக நலத் துறை அமைச்சா் மாதேவப்பா, எம்.எல்.சி. கோவிந்தராஜ் ஆகியோா் வந்திருந்தனா்.

பின்னா் அங்கிருந்து காா் மூலம் புறப்பட்டு உதகை ஹேவ்லாக் சாலையில் உள்ள தனியாா் பங்களாவுக்கு சென்றாா். அவா் மே 11-ம் தேதி வரை 5 நாள்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளாா். மேலும் ஒருசில தனியாா் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாா் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!