Skip to content
Home » சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.

சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்து சேர்வாமடம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அதே கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பல நாட்கள் தனிமையில் இருந்துள்ளனர். சில நாட்கள் கழித்து சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமி சென்று வில்வேந்திரனிடம் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார்.

அப்போது வில்வேந்திரன் திருமணத்திற்கு மறுத்து கர்ப்பத்தை கலைத்து விடு இல்லையென்றால் இதை ஊர் முழுக்க உன்னை பற்றி கூறி அவமானப்படுத்துவேன் என கூறியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் தாய் அழைத்துச் சென்று சிறுமியின் கர்ப்பத்தை கலைத்து விட்டார்.

மேலும் சிறுமி இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வில்வேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!