Skip to content

சிறப்பு மருத்துவ முகாம்…. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டம், கடைக்கோடி மக்களின் இல்லக் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டமான “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவ வசதி தேவைப்படும் நபர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். இத்திட்டத்தின் மூலமாக மருத்துவப்பணியாளர்கள்

பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று ரத்தகொதிப்பு, சர்க்கரை அளவு பரிசோதனை, இயன்முறை மருத்துவ சிகிச்சை, நீரழிவுக்கான மருத்துவ சேவைகள், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இத்திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி துவக்கி வைத்து, முகாமில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக அரியலூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் வட்டார மருத்துவ அலுவலர், இயன்முறை மருத்துவர்கள், செவிலியர்கள், நோய் தடுப்பு பராமரிப்பு பணியாளர் செவிலியர்கள், பெண் சுகாதார பணியாளர்கள் மற்றும் இடைநில சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 34 மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்றையதினம் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அஜிதா, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!