Skip to content
Home » எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் மாதுளம் பூ தெருவை சேர்ந்தவர் செல்வமணி (78). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் தணிகைவேலு (49). இவர் 1997-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் போலீசாக பணியில் சேர்ந்தார். பின்னர் திருவள்ளூர் தாலுகா போலீசில் ரோந்து பிரிவில் எஸ்ஐ ஆக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு ஆவடியில் போலீசாக பணிபுரிந்து வந்தபோது தீபா (40) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு கணேஷ், ஸ்ரீயாஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தணிகைவேலு தனது பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளார்.

பின்னர் அவர் தனது மனைவி பிள்ளைகளுடன் காக்களூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தணிகைவேலு வீட்டில் மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட தணிகைவேலுவின் தந்தை செல்வமணி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!