Skip to content

போலீஸ் ஸ்டேஷனில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார் (வயது 26). இவரும் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் கடந்த 2021-ம் ஆண்டு காவலர் பயிற்சியில் சேர்ந்ததில் இருந்து காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார், அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜ்குமார் திடீரென வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மின்விசிறியில் சால்வையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை வீடியோ காலில் பார்த்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பது குறித்து தெரிவித்துள்ளார்.  உடனடியாக அங்கு பணியில் இருந்த போலீசார் அறைக்குள் இருந்த சப்- இன்ஸ்பெக்டரை அழைத்துள்ளனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. எனவே அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்குவதற்காக நின்று கொண்டிருந்த ராஜ்குமாரை அவர்கள் மீட்டனர். பின்னர் இதுகுறித்து வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக ஸ்டேஷனுக்கு சென்ற டிஎஸ்பி  சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!