Skip to content
Home » செர்பியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூடு…. 8 பேர் பலி

செர்பியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூடு…. 8 பேர் பலி

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செர்பியா நகரத்திற்கு அருகே நேற்று பிற்பகலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர், நகரும் வாகனத்தில் இருந்து தானியங்கி ஆயுதத்தால் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.  இதையடுத்து ஏராளமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னதாக புதன்கிழமை, பெல்கிரேட் தொடக்கப் பள்ளியில் 13 வயது மாணவன் ஒருவன் எட்டு மாணவர்களையும் ஒரு பாதுகாவலரையும் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!