Skip to content
Home » பீகார்…..ரயில் நிலைய டிவியில் ஆபாச வீடியோ…. பெண் பயணிகள் ஓட்டம்

பீகார்…..ரயில் நிலைய டிவியில் ஆபாச வீடியோ…. பெண் பயணிகள் ஓட்டம்

பீகார் தலைநகர்  பாட்னா ரெயில் நிலையத்தில்  நேற்றிரவு வழக்கம்போல், தங்களது ரெயில்களை பிடிப்பதற்காக ஆண்கள், பெண்கள் என குடும்பத்துடன் பயணிகள் காத்திருந்தனர்.

அப்போது, ரெயில் நிலையத்தில் இருந்த விளம்பர பலகையில் ரயில்களின் வருகை, புறப்பாடு பற்றி அறிவிக்கும் திரையில் இரவு 9.30 மணியளவில் திடீரென ஆபாச வீடியோ ஓடியது. இதுபற்றிய காட்சிகள், சத்தங்களை கேட்டு திடுக்கிட்டு பார்த்த பயணிகள் பின்னர் தங்களது முகங்களை திருப்பி கொண்டனர்.

இதனால் பயணிகள் மத்தியில் கலவரம் ஏற்பட்டது. இதனை அறிந்து, ரெயில்வே போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ரெயில் நிலைய நிர்வாகம் அறிந்ததும், உடனடியாக திரை அணைக்கப்பட்டது.

இதன்பின், பாட்னா ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது. இணையதள குற்றவாளிகள் சிலர் ஹேக்கிங் செய்து இதுபோன்ற ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பியிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!