Skip to content
Home » வீடியோ காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…. கல்லூரி மாணவர் கைது

வீடியோ காலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…. கல்லூரி மாணவர் கைது

  • by Senthil

சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்த்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பாரிமுனையில் உள்ள தனியார்  கலை கல்லூரியில், வரலாறு 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருவது வழக்கம். அப்படி செல்லும் போது அதே பஸ்சில் பயணிக்கும் ஆர். கே. நகர் அரசு கலைக் கல்லூரியில், பி.ஏ படித்து வரும் வண்ணாரபேட்டையை சேர்ந்த பரத் ( 19 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர்களின் நட்பு வளர்ந்த நிலையில் இருவரும் தங்களின் மொபைல் எண்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இதனையடுத்து இருவரும் அடிக்கடி வாட்ஸ் அப் சாட்டிங் மற்றும் வீடியோ கால் வழியாக பேசி வந்து உள்ளனர். இந்நிலையில் மாணவியும், கல்லூரி மாணவன் பரத்தும் கடந்த 15 ம் தேதி இரவு வீடியோகாலில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த மாணவன் திடீரென மாணவியின் ஆடையைக் கழட்டுமாறு கூறி வற்புறுத்தி உள்ளார். அத்துடன் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

நண்பனாக நினைத்துப் பழகிய நபர் இது போன்ற செயலில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சியை அடைந்த மாணவி அவரது போன் இணைப்பைத் துண்டித்து விட்டார். இருப்பினும் தொடர்ந்து பரத், அந்த மாணவிக்கு விடாமல் போன் செய்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் பயந்து போன மாணவி, உடனே சம்பவம் குறித்து பெற்றோரிடம் அழுது நடந்த அனைத்தையும் கூறினார். இதையடுத்து பெற்றோர் மற்றும் மாணவி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசா வழக்கு பதிவு செய்து பரத்தை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாட்ஸ் அப் வீடியோ காலில் கல்லூரி மாணவிக்கு, மாணவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!