Skip to content
Home » சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் வருகிறது

சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் வருகிறது

  • by Senthil

நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 9-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.  இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில்  அரசின் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். 2004-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் அதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிகிறார். ராமர் பாலம் இடிப்பு, சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட சர்ச்சைகளால் சேது சமுத்திரம் திட்டம் தொடர்ந்து தாமதாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!