Skip to content
Home » திருச்சியில் சேது எக்ஸ்பிரஸ் பெட்டிகள் கழண்டதால் பரபரப்பு… யோ .. அதிகாரிகள் விசாரணை..

திருச்சியில் சேது எக்ஸ்பிரஸ் பெட்டிகள் கழண்டதால் பரபரப்பு… யோ .. அதிகாரிகள் விசாரணை..

  • by Senthil

திருச்சியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து சென்னை புறப்பட்ட பொழுது ரயில் இன்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டி கழன்றுள்ளது.

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மீண்டும் பெட்டியை இணைத்து 30 நிமிடம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றுள்ளது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் ரயில்வே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பிளாட்பாரம் இருந்து சிறிது தூரத்தில் நிகழ்ந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!