கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் வலைதள பதவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு கழகத்தலைவர் அவர்களுக்கும், பரிந்துரை செய்த
மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! களப்பணியாற்றி, பணிகளைத் துரிதப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மனதை வெல்லும் இந்த அற்புத வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு கழகத்தலைவரின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்வேன்!
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.