Skip to content
Home » செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

  • by Senthil

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை எடுத்து நேற்று முன்தினம் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியே வந்ததை வரவேற்கும் விதமாக கரூர் தேர் வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கரூர்

மத்திய கிழக்கு பகுதி திமுக சார்பாக ஸ்ரீமாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து பகுதி கழக திமுக செயலாளரும் கரூர் மாநகராட்சி மண்டல குழு தலைவருமான ராஜா தலைமையில் 500 பொதுமக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது. இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!