தமிழகத்தில் சில மாவட்டங்களில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் இல்லை. அந்த மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:
கோவை- அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் இங்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
நெல்லை– அமைச்சர் கே. என். நேரு, கன்னியாகுமரி— அமைச்சர் தங்கம் தென்னரசு
பெரம்பலூர்—- அமைச்சர் சிவசங்கர்,
தேனி—- அமைச்சர் ஐ பெரியசாமி,
தென்காசி— கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,
நாகை…. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மயிலாடுதுறை– அமைச்சர் மெய்யநாதன்
திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி—- அமைச்சர் எ.வ. வேலு,
தர்மபுரி,— எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,
கிருஷ்ணகிரி—- சக்கரபாணி
நீலகிரி—மு.பெ சாமிநாதன்,
காஞ்சிபுரம்—ஆர் காந்தி.