Skip to content

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை….. மே 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட்,  ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்  ஜாமீன் கேட்டு  செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில்,  அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் மனுவை  தள்ளுபடி செய்ய வேண்டும் என  கூறப்பட்டுள்ளது.  ஜாமீன் மனு இன்று காலை 11 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில், மனுதாரார் 320 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என   கேட்கப்பட்டது.   அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை படிக்க அவகாசம் தேவைப்படுவதால்  வழக்கு விசாரணை வரும் மே 6ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி  உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!