Skip to content

ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.1.72 லட்சம் திருட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  • by Authour

தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (59). இவர் தஞ்சை மாநகராட்சியில் கணக்காளர் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் பணம் ரொக்கமாக எடுத்தார். அதில் சில செலவுகளை செய்துள்ளார். மீதி இருந்த பணம் ரூ.1.72 லட்சத்தை தனது ஸ்கூட்டியின் இருக்கைக்கு அடியில் இருந்த பெட்டியில் வைத்து பூட்டி விட்டு அலுவலக வேலையாக சென்றார்.

பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது ஸ்கூட்டின் இருக்கைக்கு அடியில் இருந்த பெட்டி மர்மநபர்களால் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து இளங்கோவன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கோமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!