ஈரோடு, வடுகபாளையம், சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பள்ளி வேனில் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளி வேனின் கண்ணாடியை உடைத்து மாணவர்களை பொதுமக்கள் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக காயமின்றி பள்ளி மாணவர்கள் தப்பினர். சாலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.