Skip to content

பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

  • by Authour

தஞ்சை அருகே பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவர்கள் வாயில் தலைமை ஆசிரியர் டேப்ஒட்டியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து தஞ்சை மாவட்ட

கலெக்டர் இடம் கேட்டபோது விசாரணையின் போது வகுப்பு ஆசிரியை சிறிது நேரம் ஒரு மாணவனை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு மற்றொரு வகுப்பறைக்கு செல்லும்போது மாணவர்களே வாயில் டேப் ஒட்டியதாகவும் அதனை மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து பரப்பியதாகவும் தெரியவந்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை செய்து ஆசிரியர்கள் மாற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அய்யம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!