தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் வெப்ப அலை வீசுவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இன்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. 1ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை இது பொருந்தும்.
