Skip to content
Home » எஸ்பிஐ எடிஎம்மை உடைத்து 23 லட்சம் அபேஸ்.. 10 நிமிடத்தில் கைவரிசை..

எஸ்பிஐ எடிஎம்மை உடைத்து 23 லட்சம் அபேஸ்.. 10 நிமிடத்தில் கைவரிசை..

கிருஷ்ணகிரியில், குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் எதிரில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. அங்கிருந்த இயந்திரத்தை அதிகாலை வெல்டிங் மூலம் உடைத்த மர்மநபர்கள், அதிலிருந்த, 23 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக மகாராஜகடை போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் சம்பவ இடத்திற்கு காரில் வந்து, 12 நிமிடத்தில் காஸ் வெல்டிங் வைத்து, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ள திடுக் தகவல் தெரியவந்துள்ளது. காஸ் வெல்டிங் மூலம் வெட்டும்போது, பணம் எரிந்து விடக்கூடாது என்பதால், குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து வெட்டியுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் கை தேர்ந்தவர்களால் மட்டுமே இதில் ஈடுபட்டிருக்க முடியும் என, போலீசார் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  குருபரப்பள்ளியில் கடந்த ஏப்., மாதம், 10 லட்சம் ரூபாயும், ஓசூரில் கடந்த ஜூன் மாதம், 14 லட்சம் ரூபாயும் கொள்ளை போனது. இதேபோல் ஐந்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!