Skip to content
Home » சவுதியில் வெப்ப அலை.. ஹஜ் பயணிகள் 1000 பேர் பலி..

சவுதியில் வெப்ப அலை.. ஹஜ் பயணிகள் 1000 பேர் பலி..

சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக உள்ளது. பல இடங்களில் வெப்ப அலை வீசுவதாக கூறப்படுகிறது. இந்த கடுமையான வெப்பம் ஹஜ் புனித யாத்திரை பயணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. யாத்திரை வந்தவர்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், கடும் வெப்பத்தால் இந்தியா உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,081 ஹஜ் பயணியர் இறந்தது தெரிய வந்துள்ளது. இதில், அதிகபட்சமாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 658 பேர் பலியாகி உள்ளனர். வெயில் காரணமாக இந்தியாவைச் சேர்ந்த 98 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பலருக்கு ஏற்கனவே உடல் உபாதைகள் இருந்ததாகவும், வயோதிகம் காரணமாக இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர, கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுக்க, சவுதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், சவுதி அரசு தரப்பில் இறந்தவர்களின் விபரத்தை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஹஜ் யாத்திரை வந்தவர்களில் பலர் மாயமாகி உள்ளதால், அவர்களின் நிலை என்னானது என்பது தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனினும், இதுவரை இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!