Skip to content
Home » திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி… படங்கள்…

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி… படங்கள்…

  • by Senthil

ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை கொடுத்தார் ஸ்ரீ ரங்கநாதரும் அகிலாண்டேஸ்வரியும் அண்ணன் தங்கை உறவுமுறை என்று கூறப்படுகிறது. தனது தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு வருடம் தோறும் மார்கழி மாத பிறப்பன்று திருப்பாவாடை நிகழ்ச்சிக்காக பட்டுப்புடவை தங்க மாங்கல்யம் மற்றும் மங்களப் பொருட்கள் காய்கறிகள் அரிசி உள்ளிட்டவை சீர்வரிசையாக கொடுக்கப்படும். நிகழாண்டில் நாளை மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு வியாழக்கிழமை ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ரங்க விலாச மண்டபத்தில் அகிலாண்டேஸ்வரிக்கு கொடுக்கப்படும் சீர்வரிசை பொருட்களை பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் இருந்து கோயில் இணை ஆணையர் செ மாரிமுத்து மற்றும் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் கோயில் பணியாளர்கள் ஆகியோர்கள் சீர்வரிசை பொருட்களை காரில் எடுத்து வந்தனர். அதன் பின்னர் திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் முன்பு திருவானைக்கோவில் யானை அகிலா மற்றும் கோயில் பணியாளர்கள் மங்கள வாத்தியங்களுடன் வான வேடிக்கைகளுடன் வரவேற்று ஊர்வலமாக சீர்வரிசை பல்கலை கொண்டு சென்றனர். அதனைத்

தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி சன்னதி முன்பு ஸ்ரீரங்கம் கோயில் இணையானையர் மாரிமுத்து திருவானைக்கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் இடம் முறைப்படி வழங்கினார். ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வந்திருந்த அனைவரும் அகிலாண்டேஸ்வரி மற்றும் ஜம்பிகேஸ்வரர் வழிபட்டுச் சென்றனர். ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மங்களப் பொருட்கள் நாளை திருப்பாவாடை நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!