கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் ஆஞ்சநேயருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள்,
மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார் அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம், சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் ரயில்வே காலனி தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.