திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில், கார் புகுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள அக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அனைவரும் நடந்து சென்று கொண்டிருóதபோது, அவ்வழியே விராலிமலை பகுதியிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் எஸ். பெரியக்கா (45), எம். சுகன்யா (31) இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் போலீஸôர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பெரியக்கா உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். சுகன்யா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.